குழாயர் கோத்திரத்தின் முதல் காணி கோவிலூர். கோவிலூர் குளித்தலை வட்டத்தை சார்ந்தது.
சேர அரசனுக்கு வேடர்கள், வேட்டுவர்கள் பல துன்பங்களை செய்தனர்.
கோவிலூர் குழாயர் கூட்டத்து குமாரத்தினமால் வேட்டுவர்களை வென்று இலவந்தி (வேளராசி எலவந்தி) கோட்டையை பிடித்தான்.
சேர மன்னன் இந்த வெற்றியை விழாவாக நடத்தினான்.
குழாயர் கூட்டத்தினர் தேவ மன்றாடி பட்டம் பெற்றார்கள்.
மன்றாடி பட்டம் என்றால் போரில் வெற்றி பெற்ற வீரமிக்கவருக்கும், மன்றத்தில் வாதாடி வென்றவரையும் குறிக்கும்.
இன்று வரை இந்த ஐந்து கூட்டத்திற்குள் தான் பெண் எடுத்து, பெண் கொடுத்து வரும் பழக்கத்தினை பெரும்பாலும் கடை பிடித்து வருகிறார்கள்.
குழாயர் கூட்டதை, குழையர் என்றும் சில புலவர்கள் குறிப்பட்டு இருக்கின்றனர்.
வேலராசி சமஸ்தானம் தான், புத்தரச்சல் காணி.
தற்போது, எலவந்தி மற்றும் வாவிபாளையம் கிராமங்களில் பெயருக்கு முன்னால் உள்ள வேலராசியை தமிழக அரசு பதிவேட்டில் இருந்து நீக்கிவிட்டது.
சேர அரசனுக்கு வேடர்கள், வேட்டுவர்கள் பல துன்பங்களை செய்தனர்.
கோவிலூர் குழாயர் கூட்டத்து குமாரத்தினமால் வேட்டுவர்களை வென்று இலவந்தி (வேளராசி எலவந்தி) கோட்டையை பிடித்தான்.
சேர மன்னன் இந்த வெற்றியை விழாவாக நடத்தினான்.
குழாயர் கூட்டத்தினர் தேவ மன்றாடி பட்டம் பெற்றார்கள்.
மன்றாடி பட்டம் என்றால் போரில் வெற்றி பெற்ற வீரமிக்கவருக்கும், மன்றத்தில் வாதாடி வென்றவரையும் குறிக்கும்.
இன்று வரை இந்த ஐந்து கூட்டத்திற்குள் தான் பெண் எடுத்து, பெண் கொடுத்து வரும் பழக்கத்தினை பெரும்பாலும் கடை பிடித்து வருகிறார்கள்.
குழாயர் கூட்டதை, குழையர் என்றும் சில புலவர்கள் குறிப்பட்டு இருக்கின்றனர்.
கொற்றனூர் காணிப்பாடல் :
"காவல் குழாயன் கதித்த பெரியகுலன்
ஆவல்சேர் ஆந்தை அதிசேரன் - மேவியசீர்
செம்பூத்தன் செட்டியுடன் தென்கொற்றை மாநகர்க்கு
இன்புற்ற எழ்முதன்மை யே "
"ஞாயம் நிலைபெருக்கும் நற்கா வலன்குழையன்
நேயப் பெரியகுலன் நீள்ஆந்தை - ஆயன்
திருவளர் கொற்றைக்குச் சேரன்செம் பூதன்
பெருகுசெட்டி யும்காணிப் பேர் ".
பெரிய கூட்டத்து பட்டக்காரர் வேனாடுடையாரின் ஊராகிய கொற்றையூரில் (சங்கரண்டாம் பாளையம்) முதல் காணியாளர் குழாயர் கூட்டத்தினரே.
குழாயர் கூட்டம், பெரிய கூட்டம், ஆந்தை கூட்டம், சேரன் கூட்டம், செம்பூத்தன் கூட்டத்தினர் ஆகியோர் கொற்றனூரின் காணியளர்கள்..
இவர்கள் தவிர, காவலர் ஆகிய வேட்டுவரும், கொங்கு செட்டியாரும் கொற்றனூரின் காணியாளர்களே.
பெரிய கூட்டத்து வேணாடுடையார் கொற்றனூர் தலைவராக வரும்முன், குழாயர் கூட்டத்தினரின் நிர்வாகமே நடைபெற்றது. மூவேந்தர் வருகையின்போது அமரவதியாற்று வெள்ளபெருக்கால் குழாயர் கூட்ட கொற்றனூர் தலைவர்களான தேவண்ண கவுண்டரும், அவருடைய தம்பி கருப்பண்ண கவுண்டரும் நாடுகண் மேட்டுக்குத் திட்டிக் கிடாய் கொண்டு வரத் தாமதம் ஆனதால் வேணாடுடையார் தன் மகனைப் பலி கொடுத்தார் என்றும், அதனால் மிகிழ்ந்த மூவேந்தர்கள் கொற்றனூர் காணியையும், தென்கரை நாட்டு ஆட்சியையும் வேணாடர்க்கு அளித்தனர் என்று வரலாறு ஒன்று கூறப்படுகிறது. அதனால் காணியுரிமை பெற்ற பெரிய கோத்திர வேணாடுடையார்க்குக் கீழ் பணி புரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கீழ் அங்கிருக்க விருப்பமில்லாமல், கொற்றனூர் குழாயர் உதியூர் மலைக்கு கிழக்கே உள்ள வௌவால் கொத்தனூர் என்னும் காட்டுபகுதியில் ஊர் அமைத்து, கோயிலும் ஏற்படுத்தினர். பல பேர் உடுமலை, பொள்ளாச்சி, பழனி, அட்டபாடி, பாலக்காடு போன்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
வேணாடுடயாரை பாட்டுடைத் தலைவராக கொண்ட இரத்தின மூர்த்தி விறலி விடு தூதில்,
"வேண்டுபுகழ்க்
கோமான் குழாய குலத்தில் மிகஉதித்த
சீமான் பெரியண்ண தீட்சணன் "
என்று குழாயர் கூட்ட அரசரை குறிப்பிடபடுகிறது.
குழாயர் கூட்டத்து காணி பாடல்:
குழாயர் கூட்டத்து காணி பாடல்:
வளமிலகு நாகமலை சென்னிமலை கொல்லிமலை
வானிலகு
ஆனைமலைசேர்
மாசிலா அலகுமலை பன்றிமலை பொன்னூதி
மலைசெம்பொன்
மலைகுடகுடன்
தளமிலகு காஞ்சிமா நதிவானி நள்ளாறு
தாழ்வில்ஆன்
பொருனைலவணம்
தாங்குநதி காவேரி ஆழியாறு உடன்பல
தருமதென்
கரைநாடுகாண்
புளகண்ணை அவிநாசி வைகாவூர் நாடுகீழ்ப்
பூந்தறை மேல்பூந்தறை
புகழ்கோயி லூர் விளங்கில் கண்டியன் கோயில்நிழலி
பொற்பமரும் கலியாணியூர்
களபமுள ஆனையூர் குழாநிலை குயபள்ளி
கருமாபுரம்
புத்தரசை
கவசைநிரை யூர் கொற்றை மேவிய குழாயரைக்
காத்திடும்
பெரியம்மனே !"
வேலராசி என்பது பொன்குலிக்கி (பொங்கலூர்) நாட்டில் உள்ள வேலராசி வடமலைபாளையம், வேலராசி கள்ளிபாளையம், வேலராசி எலவந்தி, வேலராசி வாவிபாளையம் கிராமங்களை உள்ளடக்கிய சமஸ்தானம் .
வேலராசி சமஸ்தானம் தான், புத்தரச்சல் காணி.
தற்போது, எலவந்தி மற்றும் வாவிபாளையம் கிராமங்களில் பெயருக்கு முன்னால் உள்ள வேலராசியை தமிழக அரசு பதிவேட்டில் இருந்து நீக்கிவிட்டது.
மற்றும், வேலராசி வடமலைபாளையம், வேலராசி கள்ளிபாளையம் கிராமங்களிலும், வேலராசி என்ற அடையாளத்தை அளிக்கும் சதியை தமிழக அரசு சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
குழாயர் கூட்டத்தினரின், தொன்மையான வேலராசி என்ற அடையாளத்தை ஒருபோதும் விட்டு கொடுக்க கூடாது.
சோழமாதேவி கோயிலில் உள்ள கல்வெட்டு :
"ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் சிரீவிக்கிரம
சோழ
தேவர்க்கு யாண்டு இருபதாவது சோழமாதேவி நல்லூரில்
வெள்ளாளன் குழாயரில் அதிசிய சோழன் அரைசன் ஆன
மணிகைராயனுக்கு நன்றாகத் திருமண மண்டபத்தில் திருநிலை
கால் இரண்டும் படியும் நாட்டு விச்சேன் மணிகைராயனேன்
பன்மாகேசுவரர் ரட்சை"
கொங்கதேச ஊர்த்தொகை:
பொங்கலூர்
கொடுவாயி செம்பை குன்றாபுரம்
புற்றிரைசை யுகாயனகரம் புகல்பொருந்தா புரி திருப்பையூருடனேற் புகழ்பெரும் பிள்ளை நகரம் தங்குமிச்சிக் காணி வானவன் சேரியொடு தளிகைநிறை யங்கிநகரம் சாரரவண நல்லூர்பல் லாபுரி குடிமங்கை தகைமையுட னோதுதென்னா மங்கலந் தென்பள்ளி லக்கர் பெற்றம்பள்ளி வாய்த்தநம னாரியெழில்சேர் மண்ணறை முகுந்தநல் லூரமுக் கயங்கற்றை மாலூற்றலூர் சிறந்த புங்கமிகு காஞ்சிநதி லவணநதி யாண்கொல்லி புராரிநதி மாமாங்குசூழ் பூர்வீக வலகுமலை யாண்டவன் அரசுபுரி பொன்கலூர் நாடுதானே |
பொன்கலூர்
|
இச்சிக்காணி
|
தென்னமங்கலம்
|
கொடுவாயி
|
அலகுமலை
|
தென்பள்ளி
|
செம்புத்தொழு
|
தளிகை
|
இலக்கம்பாடி
|
கொக்கம்பாளயம்
|
அவிநாசிபாளயம்
|
பெற்றம்பள்ளி
|
குன்றிடம்
|
நிறையூர்
|
நமனாரி
|
புற்றிரைச்சல்
|
அங்கித்தொழு
|
மண்ணறை
|
உகாயனூர்
|
அரவணநல்லூர்
|
நல்லூர்
|
பெருந்தொழு
|
பல்லாக்கோயில்
|
அமுக்கயம்
|
திருப்பூர்
|
பொட்டிக்காம்பாளயம்
|
கற்றாங்காணி
|
பெரும்பிள்ளையூர்
|
குடிமங்கலம்
|
ஊற்றுக்குழி.
|
- ஆக
ஊர்கள் - 27
தென்பொங்கலூர்
நாடு
கீரனூர்
பொம்மனல்லூர் கேடில் பருத்தியூர்
நாரி பொன்னி பாடியொடு ராயகுளம் - வீரமிகத் தங்குகூத் தம்பூண்டி தானாமா றூருந்தென் பொன்கலூர் நாடாய்ப் புகல் |
கீரனூர்
|
பருத்தியூர்
|
ராயகுளம்
|
பொம்மனல்லூர்
|
பொன்னிபாடி
|
கூத்தம்பூண்டி
|
-
ஆக ஊர்கள் 6
இதனை வையாபுரி நாட்டுக்கு அடைசல் (இணை) நாடு
என்றுங் கூறுவர்.
கொங்கு மண்டல சதகம்
'நற்றேவாமுர்தம் உணர்வொழிந்து' மெக்காலம்
'குழாயகுலேந்திரன்"
'குழாயகுலேந்திரன்"
- தொடரும்
No comments:
Post a Comment